கிளிநொச்சியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்பு!!

909

கிளிநொச்சி, கனகாம்பிகை குளம் பகுதியில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கனகாம்பிகைக்குளம் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியை சுற்றி கிளிநொச்சி பொலிஸாரும், படையினரும் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது பயன்பாட்டில் இல்லாத வீடு ஒன்றிலிருந்து சில சந்தேகத்திற்கிடமான கையடக்க தொலைபேசிகள், கமரா மற்றும் துப்பாக்கி ரவைகள் போன்ற பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

எனினும் குறித்த வீட்டில் தங்கியிருப்பவர் இரும்பு வியாபாரி என அப்பகுதி மக்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

பொருட்கள் இரும்புடன் கலந்து வந்திருக்கலாம் எனவும் கமரா, தொலைபேசி ஆகியன அவர் பயன்படுத்தியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, எனினும் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.