
குண்டுத் தாக்குதல்களையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 44 பேர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களையடுத்து நாடு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.
இதன்போது பலர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கையில்,
பயங்கரவாதத் தாக்குதலையடுத்து நாட்டில் பாதுகாப்புப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டவர்களில் 44 பேர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினராலும், 15 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினராலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பொலிஸ் மற்றும் முப்படையினர் ஆகியோர் இணைந்து இதனை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.




