சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம் : ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு!!

1084

சமூக வலைத்தளங்கள் மீதான தடையை உடன் அமுலுக்கும் வரும் வகையில் நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த 21ஆம் திகதி கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு உள்ளிட்ட எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

இதனையடுத்து வதந்திகள் பரவுவதை தடுக்கும் நோக்கில் வட்ஸ் அப், வைபர், இன்ஸ்டகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் இலங்கையில் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.