திருகோணமலையில் வாளால் வெட்டப்பட்ட இளைஞனிற்கு உதவிசெய்ய மறுத்த சாரதிக்கு நேர்ந்த கதி!!

962

திருகோணமலையில் காயம் ஏற்பட்டநிலையில் இருந்த இளைஞனிற்கு உதவிசெய்ய மறுத்த முச்சக்கரவண்டி சாரதி இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று முச்சக்கரவண்டி சாரதிகள் இருவரையும் ஆஜர்படுத்திய போதே மே மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 16ஆம் திகதி திருகோணமலை கடற்படை முகாமிற்கு அருகாமையில் இளைஞர் ஒருவர் காதல் விவகாரத்தில் வாளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இதன் போது குறித்த இளைஞன் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் உதவி கோரிய போது அவ்விருவர் உதவி செய்ய மறுத்துள்ளனர்.

முற்றிலும் மனிதாபிமானமற்ற இச்செயல் தொடர்பாக முச்சக்கரவண்டி சாரதிகள் இருவரும் துறைமுக பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதோடு, இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர்.