மயானங்களில் தீவிர தேடுதலில் விசேட அதிரடிப்படையினர்!!

857

மயான பூமிகளிலும் விசேட அதிரடிப் படையினர் சல்லடை போட்டுத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதல்களின் பின்னர், பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது வாள்கள், கத்திகள், துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள், வெடிகுண்டுகள் மற்றும் தற்கொலை அங்கிகள் உட்படப் பல ஆயுதங்கள் மீட்கப்பட்டு வருவதுடன் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக மயான பூமிகளிலும் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.