பெருந்தொகையான பணத்துடன் சஹ்ரானின் சகோதரி கைது!!

346

தேசிய தௌஹீத் ஜமாய்தின் தலைவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதியுமான முகமட் சஹ்ரான் ஹாசீமின் சகோதரி இன்று மாலை மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய காத்தான்குடி, கப்பல் ஆலிம் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகமட் சர்ஹான் ஹாசீமின் சகோதரியான முகமது காசீம் மதனியா(25வயது) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவரின் வீட்டில் இருந்து 20 இலட்சம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகமட் சஹ்ரான் ஹாசீமின் குடும்ப உறுப்பினர்கள் சாய்ந்தமருதில் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டிருந்த ஒரு சகோதரி காத்தான்குடியில் இருந்துவந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமைக பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

-தமிழ்வின்-