பளையிலிருந்து முறிகண்டி நோக்கி பயணித்த வாகனம் விபத்து : ஐவர் வைத்தியசாலையில்!!

249

பளையிலிருந்து முறிகண்டி நோக்கி பயணித்த வாகனமொன்று கிளிநொச்சி நகரில் வைத்து நேற்று நள்ளிரவு விபத்திற்கு உள்ளானதில் நால்வர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளர்.

நால்வரில் ஒருவர் பலத்த காயங்களுக்கு இலக்கியுள்ளதுடன், ஏனையவர்கள் சிறு காயங்களுக்கு இலக்காகி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிளிநொச்சி நகரின் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள ஏ9 வீதியில் மரத்தில் வாகனம் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அதிக வேகம் விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.