மறைந்த இளவரசி டயானாவில் மரணத்தில் ராணுவத்துக்கு தொடர்பில்லை என லண்டன் பொலிசார் அறிவித்துள்ளனர்.
கடந்த 1997ம் ஆண்டில் பாரிசில் நடந்த கார் விபத்தில் இளவரசி டயானா காலமானார்.
இந்த விபத்தில் பிரிட்டிஷ் ராணுவ வீரர் ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை விசாரித்த லண்டன் பெருநகரப் போலிசார், குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரம் இல்லை என தற்போது அறிவித்துள்ளனர்.
ராணுவ அதிரடிப்படையின் ஆவணங்களைப் பார்வையிட்ட பின்னரே இந்த முடிவுக்குத் தாங்கள் வந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.