யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த யாழ்தேவி கடுகதி புகையிரதம் உமையாள்புரம் பகுதியில் வைத்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த புகையிரதம், உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்தள்ளது. விபத்தில் உழவு இயந்திரம் சேதமடைந்துள்ளதுடன், சாரதி எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பியுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





