கொழும்பு தற்கொலை குண்டுத்தாக்குதல் : பிரதான பயங்கரவாதியை கண்டுபிடித்த பொலிஸார்!!

442

கொழும்பு உட்பட பல இடங்களில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை வெடிகுண்டுகளை தயாரித்த பிரதான நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு கட்டுவபிட்டிய தேவாலயத்தில் வெடி குண்டை வெடிக்க வைத்து பெருமளவு மக்களை கொலை செய்த தீவிரவாதி தொடர்பில் முக்கிய பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாழைச்சேனை பிரதேசத்தை மொஹமட் ஹஸ்துன் என்பவர் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் பிரதான வெடிகுண்டு நிபுணர் என பாதுகாப்பு பிரிவு உறுதி செய்துள்ளது.

வெடிகுண்டு தயாரிப்பு தொடர்பில் மொஹமட் ஹஸ்துன் வெளிநாட்டில் பயிற்சி பெற்றுள்ளார். அவரது மனைவி சாரா என்பவர் சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் உயிரிழந்துள்ளார். சாரா வாழைச்சேனையில் வசித்து வந்துள்ளார்.

தற்கொலை தாக்குதலுக்கு தேவையான நிதி தெமட்டகொட இப்ராஹிம் குடும்பத்தினால் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது

-தமிழ்வின்-