நாட்டின் பாதுகாப்பு வழமைக்குத் திரும்பும் வரை பாடசாலைகளை மீண்டும் ஒரு வாரம் தாமதித்து ஆரம்பிக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அஸ்கிரிய மாநாயக்கர்கள் அரசாங்கத்திடம் இது தொடர்பான அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இரண்டாம் தவனைக்கான கற்றல் நடவடிக்கைகள் கடந்த 22ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக கற்றல் நடவடிக்கைகள் இரண்டு வாரங்கள் பிற்போடப்பட்டன.
இந்நிலையில், நாளைய தினம் மீண்டும் கற்றல் நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மீண்டும் பாடசாலைகளை தாமதித்து ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




