தமிழ் மொழியில் பாட முடியாவிட்டால் வடக்கிற்கு தேசிய கீதம் தேவையில்லை : த.தே.கூட்டமைப்பு!!

309

TNAதமிழ் மொழியில் பாட முடியாவிட்டால் வடக்கிற்கு தேசிய கீதம் தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது,

இலங்கை ஓர் இந்து நாடு, இராவண மன்னனே இலங்கையை ஆட்சி செய்தான் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்து மக்களின் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மஹா வம்வசத்திலும் இலங்கை இந்து நாடு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, இராவணன் ஓர் சிவ பக்தன். விஜய மன்னன் ஓர் தமிழன்.

தேவநம்பியதீச மன்னனும் பிற்காலத்தில் இந்து மத்த்தை தழுவிக்கொண்டார். பிள்ளைகளுக்கு இந்து பெயர்களையே அவர் சூட்டினார். பண்டுகபாய மன்னன் சிவ வழிபாடு செய்திருந்தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு கிழக்கில் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாட சந்தர்ப்பம் இல்லாவிட்டால் தேசிய கீதமே அவசியமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.