பதவியில் இருந்து விலகப்போவதில்லை : மைத்திரி திட்டவட்டம்!!

559

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களுக்கு பொறுப்பேற்று தாம் பதவிவிலகப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிபிசி செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக புலனாய்வினரின் தகவல் உயர் மட்டம் வரை கிடைத்துள்ளது.

எனினும் அதனை தாம் உரியவகையில் கருத்திற்கொள்ளவில்லை எந்த நாட்டிலாவது வன்முறைகளுக்கு பொறுப்பேற்று தலைவர்கள் விலகியதுண்டா?

எனவே தாமும் இந்த தாக்குதலை தடுக்கமுடியாமல் போனமைக்காக பதவிவிலகப்போவதில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்கை செய்தி சேவைக்கு அண்மையில் வழங்கிய செவ்வியிலும், ஜனாதிபதி இதே கருத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது