கனகராயன்குளம் பகுதி கிணற்றில் விழுந்து 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!!

384

Kinaruகனகராயன்குளம் பகுதியில் பொது கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் நடைபெற்றுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கிணற்றில் விழுந்த 7 வயதான விஜயன் ஆதித்தியன் என்பவர் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.

சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.