மட்டக்களப்பில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் : சந்தேகநபர் கைது!!

475

மட்டக்களப்பில் சிசுவின் சடலம் ஒன்று நேற்று காலை பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு – வாழைச்சேனை, வாகனேரி குடாமுனைக் கல் பகுதியில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட 11 வயதான சிறுமியின் தாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த சிறுமி இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைக்காக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.