
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு தேற்றாதீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த விபத்தில் தேற்றாத்தீவினை சேர்ந்த அமிர்தநாதன் தருமராஜா (43வயது)என்பவரே உயிரிழந்துள்ளார்.
வேகமாக சென்றவர் கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வளைவில் வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாமல் வீட்டு மதிலில் மோதி விபத்துக்குள்ளானதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பிலான சீசீரிவி கமராப் பதிவுகளும் பெறப்பட்டுள்ளது.




