யாழில் பிறந்து ஒரு நாளேயான சிசுவின் சடலம் காயங்களுடன்!!

472

பிறந்து ஒரு நாளான ஆண் சிசுவின் சடலம் கை, தலை பகுதிகளில் காயங்களுடன் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் கிடந்துள்ளது.

கரவெட்டி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையில் குறித்த சடலம் கிடந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெல்லியடி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு பொலிஸார் விரைந்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று பருத்தித்துறை நீதிமன்றின் உத்தரவு பெறப்பட்டு சிசுவின் சடலம் மீட்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.