இலங்கையில் விசா தொடர்பில் புதிய நடைமுறை!!

579

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் வதிவிட விசாக்களை பெற்றுக்கொள்ள பாதுகாப்பு பரிந்துரையை பெறவேண்டும். இனிவரும் காலங்களில் இலங்கை புலனாய்வுப்பிரிவின் பரிந்துரையைப் பெறவேண்டும்.

இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சே இந்த விசாக்களுக்கான அனுமதியை வழங்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வதிவிட விசாக்களுக்காக தற்போது 1000 பேர் வரை காத்திருக்கின்றனர். இதில் மாலைதீவு நாட்டினரும் அடங்குகின்றனர்.

கணக்கெடுப்பு ஒன்றின்படி சுமார் 8 ஆயிரம் மாலைதீவு மாணவர்கள் தமது பெற்றோருடன் இலங்கையில் தங்கியுள்ளனர்.

ஏற்கனவே மதப்பணிகள் என்ற அடிப்படையில் முஸ்லிம் விவகார அமைச்சின் பரிந்துரையின்கீழ் பாகிஸ்தான், எகிப்து, பங்களாதேஸ், ஈரான், சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து வந்துள்ள 200 பேர் வதிவிட விசாக்களை பெற்றுள்ளனர்.