மரண வீட்டில் முகத்தை மூடி வந்த பெண்ணால் குழப்பம்!!

485

சிலாபத்தில் நடைபெற்ற மரண வீட்டில் முகத்தை மூடி வந்த இஸ்லாமிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து சிலாபம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்தப் பகுதியை சேர்ந்த 23 வயதான பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதான அவரது கணவர் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்தவராகும்.

திருமணத்திள் பின் அந்த பிரதேசத்திற்கு இருவரும் வந்துள்ளனர். கைது செய்த இருவரையும் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் முகத்தை மூடும் வகையில் உடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி செயற்பட்ட நிலையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.