பகிடிவதை குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று மாணவர்களுக்கு 6 மாத கடூழிய சிறைத் தண்டனை!!

465

uniபேராதனை பல்கலைக்கழக புதிய மாணவர் ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்தியதை ஒப்புக் கொண்ட மூன்று சிரேஸ்ட மாணவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக இந்த தண்டனையை விதித்துள்ளார்.

5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறை தண்டனை குறித்து மூன்று மாணவர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளது.

2011 ஒக்டோபர் 26 அல்லது 27ம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்தியமை, பாலியல் தொல்லை செய்தமை, அதற்கு உதவி புரிந்தமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுக்கள் மாணவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை தண்டனை கோவைச் சட்டம் மற்றும் பகிடிவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளான மூன்று மாணவர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.