மன்னாரில் மதுக்கடையை அகற்றுமாறுகோரி மக்கள் எதிர்ப்பு பேரணி!!(படங்கள்)

473

மன்னார் பெரியகடை கிராமத்தில் தனியார் ஒருவருடைய வீட்டில் அமைக்கப்பட்டு வரும் மதுக்கடையினை உடனடியாக அகற்றக்கோரி அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 10 மணியளவில் பெரியக்கடை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கமும், பெரிய கடை கிராம மக்களும் இணைந்து குறித்த மது விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினர்.

ஊர்வலமாக மன்னார் நகரசபையை அடைந்த மக்கள், நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ், நகர சபை உறுப்பினர் என்.நகுசீன் ஆயோரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர். இதனைத் தொடர்ந்து குறித்த மக்கள் பேரணியாக சென்று மன்னார் பிரதேசச் செயலக அதிகாரிகளிடம் மகஜரை கையளித்தனர்.

இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை, மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை, உட்பட அக்கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர்.

நீர் வடிகாலமைப்பு மற்றும் சமூர்த்தி உதவித்திட்டம் ஆகியவற்றிற்கு இக்கிராம மக்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கையொப்பங்களை தவறான முறையில் பயன்படுத்தி இக்கிராம மக்களும் ஆதரவு வழங்குவதாக கோரி குறித்த மது விற்பனை நிலையத்தினை அமைத்து வருவதாக பேரணியில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

12 3 4