பிரித்தானிய அரசியலில் திடீர் திருப்பம் : பதவியை ராஜினாமா செய்தார் பிரதமர்!!

308

பிரித்தானிய பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக திரேசே மே அம்மையார் அறிவித்துள்ளார். எதிர்வரும் ஜுன் மாதம் 7ஆம் திகதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

புதிய பிரதமரை தெரிவு செய்ய வழி வகுக்கும் வகையில் தான் பதவி இராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Downing வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தான் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Brexit வழங்க முடியவில்லை என்று ஒரு ஆழ்ந்த வருத்தம் தனக்கு எப்போதும் மீதமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

கன்சர்வேடிவ் கட்சி தலைமைத்துவத்திற்கு ஒருவர் போட்டியிட்டு வரும் வரை தான் பிரதமராக தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 7ஆம் திகதி தனது பதவியை அவர் இராஜினாமா செய்த பின்னர் கட்சி தலைவருக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் வாரங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.