யாழ். கச்சேரி – பூவங்குலம் பெந்தகொஸ் தேவாலயத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியொன்று வான் ஒன்றும் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.
வான் மற்றுமொரு வாகனத்தை முந்த முற்பட்ட வேளையில் எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது வானில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், வானின் சாரதி தப்பி ஓட முயற்சித்த வேளை போது பொது மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





