கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை அமுல்!!

309

புதிய நடைமுறை

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறைகளை இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அமுல்படுத்தியுள்ளது. கடவுச்சீட்டு கட்டணம் தொடர்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.



அதற்கமைய நாளை முதல் புதிய கட்டணம் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செயற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய சாதாரண சேவை 3500 ரூபாவாகவும் ஒரு நாள் சேவை 15000 ரூபாவாகவும் அமுல்படுத்தப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது சாதாரண சேவை 3000 ரூபாவாகவும் ஒரு நாள் சேவை 10000 ரூபாவாகவும் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.