பாடசாலை மாணவர்களிடமும், பெற்றோரிடமும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!!

358

பாடசாலைகளுக்கு ஆகக்கூடிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால், வதந்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம் என பாடசாலை மாணவர்களிடமும், பெற்றோரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி கோரிக்கையை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர நேற்றைய தினம் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இராணுவத்தினர் மற்றும் சிவில் பாதுகாப்பு பொலிஸாரால் பாடசாலைகளுக்கு ஆகக் கூடுதலான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக தேவைக்கமைய சில பாடசாலைகளுக்குக்கு விஷேட பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சில பாடசாலைகளுக்கு நடமாடும் பொலிஸ் பாதுகாப்பு சேவை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். இவ்வாறான நிலையில் வதந்திகளை நம்பி அச்சமடைய தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.