கொள்ளையர்கள் செய்த அட்டகாசம் : பெண்ணொருவர் பரிதாப மரணம்!!

349

தென்னிலங்கையில் கொள்ளையர்களின் அட்டகாசம் காரணமாக பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மாத்தறை – தல்பாவில பிரதேசத்தில் பெண்கள் இருவரின் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை வீடு ஒன்றிற்குள் புகுந்த தம்பதியினால் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த தம்பதியினர் வீட்டில் இருந்த பெண்களின் முகத்தில் விஷம் கலந்த கைக்குட்டை வைத்து மயக்கமடைய செய்துள்ளனர்.

குறித்த பெண்கள் மயக்கமடைந்தவுடன் அவர்கள் கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த நிலையில் மயக்கமடைந்த இரண்டு பெண்களும் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களில் 77 வயதான வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.