அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவித்து வியாழேந்திரன் போராட்டம்!!

413

வியாழேந்திரன் போராட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் அடையாள உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.

மட்டக்களப்பு, காந்தி பூங்காவிற்கு முன்பாக இன்று காலை 7 மணியளவில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அமைச்சர் ரிசாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் போது அவருடைய ஆதரவாளர்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.