பதவிகளை ராஜினாமா செய்தனர் அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா!!

767

அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

ஆளுநர்களான ஹில்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது இருவரும் தங்கள் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளனர்.

இருவரின் ராஜினாமா கடிதங்களையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.