நான் எல்லோரையும் கொல்லப்போகிறேன் : பிரித்தானியாவில் விமான நிலையத்திற்குள் கத்தியுடன் நுழைந்தவரால் பரபரப்பு!!

299

கத்தியுடன் நுழைந்தவரால் பரபரப்பு..

பிரித்தானிய விமான நிலையம் ஒன்றிற்குள் கத்தியுடன் நுழைந்தவரால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே, நான் எல்லோரையும் கொல்லப்போகிறேன் என மிரட்டல் விடுத்த தகவல் தெரியவந்துள்ளது.

அதிகாலை 2 மணியளவில் Gatwick விமான நிலையத்திற்குள் இரண்டு கத்திகளுடன் நுழைந்த 30 வயது மதிக்கத்தக்க ஒருநபர், எல்லோரையும் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்ததையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பயணிகள் வெளியேற்றப்பட்டதோடு, விமான நிலையத்திற்குள் நுழைந்த ஆயுதம் தாங்கிய பொலிசார் டேஸர் கொண்டு அந்த நபரை தாக்கி அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் விமான நிலைய ஊழியர்கள் மட்டும் அனுமதிக்கப்படும் இடத்தில் நிகழ்ந்துள்ளதால், ஒரு வேளை அவர் விமான நிலைய ஊழியராக இருக்கலாம் என்னும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், பேருந்து பயணி ஒருவர், விமான நிலையம் நோக்கி சென்ற ஒரு மனிதரை சந்தித்ததாகவும், அவர், விமான நிலையத்தில் ஒரு படுகொலையை நிகழ்த்தப்போகிறேன், எல்லோரையும் கொல்லப்போகிறேன் என்று கூறிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

Callum Oldfield (21) என்னும் அந்த நபர் வேலைக்கு செல்லும்போது பேருந்து நிலையம் ஒன்றின் அந்த சந்தேகத்திற்குரிய நபரைக் கண்டதாகவும், அப்போதுதான் அவர் இவ்வாறு தெரிவித்ததாகவும் தெரிவித்தார். உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்த Oldfield, அந்த நபர் தனது கையில் ஒரு பெட்டியை வைத்திருந்ததாக தெரிவித்தார், அந்த பெட்டியில்தான் அந்த மர்ம நபர் கத்திகளை வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.

அந்த நபர் நான் எல்லோரையும் கொல்லப்போகிறேன் என்று கூறியதல் கேட்டு அதிர்ந்து தான் பின்வாங்கியதாக தெரிவித்துள்ள Oldfield, லொட்டரியில் பெரும் தொகையை வென்றது போன்ற மகிழ்ச்சியுடன் அந்த நபர் காணப்பட்டதாக தெரிவித்துள்ளதையடுத்து ஒரு வேளை அவர் மன நலம் பாதிக்கப்பட்டவராக இருப்பாரோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.