கார் – புகையிரதம் மோதி விபத்து : மூவர் படுகாயம்!!

776

மூவர் படுகாயம்

கண்டி – ஹீரஸ்ஸகல தொடரூந்து கடவைக்கு அருகில் சிற்றூர்தியொன்று தொடரூந்தில் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் சிற்றூர்தியில் பயணித்த இருவரும் தொடரூந்து கடவையின் காவலாளியுமே காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

விபத்து இடம்பெறும் போது தொடரூந்து கடவை ஒழுங்காக மூடப்படாமல் இருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்த காரியாலயம் மேலும் குறிப்பிட்டுள்ளது.