கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் முன் பாய்ந்த இளைஞர்!!

219

புகையிரதம் முன் பாய்ந்த இளைஞர்

கொழும்பு – கோட்டையை நோக்கி பயணித்த தபால் புகையிரதம் முன்பாக குதித்து இளைஞரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு பதுளையை அண்மித்த எல்ல புகையிரத நிலையத்தின் அருகில் வைத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் வெலிமடை, கெப்பிட்டிப்பொல பகுதியைச் சேர்ந்த தக்சின லங்காநாத் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

இந்த நிலையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் பண்டாரவளை அரச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான அடுத்த கட்ட விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.