வாகன விபத்தில் குடும்பஸ்தர் பரிதாபமாக பலி!!

235

குடும்பஸ்தர் பரிதாபமாக பலி

தலவாக்கலை, லிந்துலைக்கு அண்மித்த பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தலவாக்கலையிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் பாதசாரதி மீது மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் படுகாயமடைந்ததோடு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதன்போது படுகாயமடைந்த பாதசாரி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தலவாக்கலை நானுஓயா தோட்டத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரான சுப்பிரமணியம் தியாகராஜா என்பவர் என தெரியவந்துள்ளது. மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை கைது செய்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாகவும், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.