தீயில் கருகி உயிரிழந்த பெண்!!

261

உயிரிழந்த பெண்

களனி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு பெண்ணொருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார். பொலிஸ் அவசர அழைப்பு தொலைபேசி இலக்கமான 119க்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 74 வயதான அனஸ்ட்ரோஷியா மரியா அரலந்திர என்ற பெண்மணியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தால், மெழுகுவர்த்தியை கொளுத்தி வைத்து விட்டு, பெண்ணின் மகளும், அவரது கணவரும் அயல் வீடொன்றில் நடந்த வைபவம் ஒன்றுக்கு சென்றிருந்தனர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மெழுகுவர்த்தி கீழே விழுந்து இந்த தீ பரவியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. களனி பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.