கற்சிலைமடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய இருவர் வைத்தியசாலையில்!!

558

இருவர் வைத்தியசாலையில்

முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கற்சிலைமடு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த இருவரும் ஒட்டுசுட்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பிலிருந்து ஒட்டுசுட்டான் நோக்கி எரு ஏற்றி கொண்டு பயணித்த லொறியொன்றே கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்கு இலக்காகியுள்ளது. விபத்து இடம்பெற்ற போது லொறியில் இருந்த சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவருமே காயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.