கடலில் மூழ்கிய நபரின் சடலம் இரண்டு தினங்களுக்கு பின்னர் மீட்பு!!

243

கடலில் மூழ்கிய நபரின் சடலம்

காலி கடற்பரப்பில் மூழ்கி காணாமல் போன நபர் ஒருவரின் சடலம் இரண்டு தினங்களுக்கு பின்னர் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 16 ஆம் திகதி குறித்த நபர் கடற்கரைக்கு அருகில் காணப்படும் குன்று ஒன்றின் மீது நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்த நிலையில் தவறி கடலில் வீழ்ந்து இருவர் வேகமாக வந்த அலையில், இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது காணாமல் போன இருவரில் யுவதி அன்றைய தினம் மீட்கப்பட்டார். குறித்த இளைஞரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனைகளுக்காக காலி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.