தமிழ் பேச தெரியாதையிட்டு கவலையடைகிறேன் : இராணுவத் தளபதி!!

519

இராணுவத் தளபதி என்ற வகையில் தனக்கு தமிழ் பேசத் தெரியாது என்பதையிட்டு கவலையடைவதாக இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 150வது ஜனன தினத்தை முன்னிட்டு, நுவரெலியா றம்பொடை டன்சினன் தோட்டத்தில் மகாத்மா காந்திரம் புதிய கிராமத்தில் இன்று நடைபெற்ற மர நடுகை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

உங்களின் இராணுவத் தளபதி என்ற வகையில் தமிழ் மொழி எனக்கு தெரியாதது குறைபாடு. தமிழ் பேச முடியாமைக்கு வருந்துகிறேன்.

இப்படியான திட்டங்கள் மூலம் மக்களின் தலைவர்கள் அவர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த எதிர்பார்த்துள்ளனர் எனவும் மஹேஸ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி, இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் அபிவிருத்தி அதிகாரி மஞ்சுநாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.