சவப்பெட்டியை தூக்கிக்கொண்டு புதைகுழிக்குச் சென்றவர்கள் பதறியடித்து ஓட்டம்!!

552

நல்லடக்கம் செய்வதற்காக சவப்பெட்டியை தூக்கிக்கொண்டு புதைகுழிக்குச் சென்றுகொண்டிருந்த போது கலைந்த குளவிகள் இறுதி ஊர்வலத்தில் சென்றவர்களை விரட்டி விரட்டி கொட்டியதால் சவப்பெட்டியையும் அவ்விடத்திலேயே விட்டுவிட்டு பதறியடித்து ஓடியுள்ளனர்.

வட்டவளை பகுதியில் நேற்று முன்தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் மூவர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை அடுத்து அனாதையாக விட்டுச் செல்லப்பட்ட சவப்பெட்டியை இருட்டோடு இருட்டாக வந்த அந்த தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் புதைத்துள்ளனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த நபரொருவரின் இறுதி ஊர்வலத்தில் சவப்பெட்டிக்கு முன்பாக சென்றுகொண்டிருந்தவர்கள் பட்டாசு கொளுத்தி வீசியுள்ளனர்.

அந்த சத்தத்தில் கலைந்த குளவிகள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை விரட்டி விரட்டி கொட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.