மகிழ்ச்சியான செய்தி

இலங்கையின் சில இடங்களில் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் உயர் தரத்திலான புதிய பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இந்த விடயத்தை இலங்கை போக்குவரத்து சபையின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

வெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள உயர் தரத்திலான புதிய பேருந்துகள் ஒன்பது, எதிர்வரும் 27ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இலங்கையின் பொது போக்குவரத்து துறையின் முக்கிய திருப்பு முனையாக இது அமையவுள்ளது. இந்த பேருந்துகள் கட்டுபெத்த, மஹரகம, பொலன்னறுவை மற்றும் மாத்தளை பேருந்து நிலையங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.





