புற்றுநோயினால் இறந்து கொண்டிருக்கும் நபர் ஒருவர், தன்னுடைய நாயிற்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்வானது அனைவரின் இதயங்களையும் உறைய வைத்துள்ளது.
புற்றுநோயினால் இறந்து கொண்டு இருக்கும் 21 வயதான மைக் பெற்றோஸிநோ என்பவர் தனது சிறுவயது முதல் வளர்த்து வந்த அன்பான நாய்க்குட்டிக்கு இறுதி பிரியாவிடையினை கூறுவதற்கு வைத்தியர்களினால் அனுமதிக்கப்பட்டார்.
அமெரிக்கா மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் நடந்த இச்சம்பவம் நம்மை அறியாமலே கண்ணீரை வரவழைப்பதாக அமைந்துள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் இருக்கும் அனைவரின் இதயங்களையும் உறைய வைத்துள்ளது.




