தென்னிலங்கையில் மர்மநபர்கள் அட்டகாசம் : துறைமுகத்துக்குள் நடந்த கொடுமை!!

933

மர்மநபர்கள் அட்டகாசம்

தென்னிலங்கையிலுள்ள துறைமுகம் ஒன்றில் மர்மநபர்களால் வைக்கப்பட்ட தீயினால் பெருமளவு படகுகள் எரிந்து நாசமாகியுள்ளன. ஹுங்கம – குருபொத்துன துறைமுகத்தில் இன்று அதிகாலை தீ பரவல் ஏற்பட்டதால், 20 இற்கும் அதிகமான படகுகள் முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.மர்ம குழுவொன்று இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனால் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த 20க்கும் அதிகமான மீன்பிடிப் படகுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக 5 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.