குடும்பத் தகராறினால் வீட்டுக்கு தீ வைத்த கணவன்!!

1008

வீட்டுக்கு தீ வைத்த கணவன்

மட்டக்களப்பு – வெல்லாவெளி, மண்டூர் பாலமுனை பகுதியில் தனது வீட்டிற்கு நபர் ஒருவர் தீவைத்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் மனைவி அவரின் உறவினர் வீட்டுக்கு சென்ற பிறகு கணவன் தனது வீட்டுக்கு நேற்று மாலை தீயிட்டு எரித்துள்ளார். கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறினால் கணவன் ஆத்திரமடைந்ததையடுத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து அயலவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய குறித்தநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் அவரை தேடிவருவதோடு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.