பேருந்தில் மோதுண்ட மோட்டார் சைக்கிள் : சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி!!

312

விபத்து

ஏறாவூர் – சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்தில் உந்துருளி மோதி இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெறும் போது உந்துருளியில் இரண்டு இளைஞர்கள் பயணித்துள்ள நிலையில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மற்றைய இளைஞர், மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதியை கைது செய்துள்ள ஏறாவூர் காவல்துறை, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.