கொழும்பில் காணிகள் வாங்க காத்திருப்போருக்கு..!!

752

கொழும்பு பெருநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் காணிகளின் பெறுமதி 64 சதவீதத்தினால் அதிகரித்திருக்கின்றது. அண்மையில் பிரபல வர்த்தக இணையத்தளத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

கொழும்பு பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள காணிகளின் விலை எதிர்பார்க்கப்பட்டதைவிட தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

இந்த விலை அதிகரிப்பு பட்டியலில் தலஹேன பிரதேசம் முதலாம் இடத்தை பிடித்துள்ளது. குறித்த பகுதிகளில் உள்ள காணி 64 வீதம் அதிகரித்துள்ளது. அதற்கடுத்தபடியாக ராகம, கொத்தொட்டுவ மற்றும் கொலன்னாவ ஆகிய பிரதேசங்கள் 55 – 35 வீதம் வரையிலும் அதிகரித்துள்ளது.

அத்துடன் தலவத்துகொட பிரதேசத்தில் பேர்ச் காணி 1.7 – 2 மில்லியன் ரூபாயக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே விலையில் தலஹேன பிரதேசத்திலும் காணி விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் கொழும்பில் முக்கிய பகுதிகளான தெஹிவளை மற்றும் நாவல பிரதேசத்தில் காணிகளே அதிக பெறுமதியை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நுகேகொடை, ராஜகிரிய, பன்னிப்பிட்டிய, அத்துருகிரிய, புறக்கோட்டை, மஹரகம, கொட்டாவ மற்றும் ஹோக்கந்தர பகுதிகளில் காணி விலை 25 – 32 வீதம் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.