விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக பலி!!

446

பெண் பலி

குருணாகல்-தேவாலயம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று இடம்பெற்றதாக காவல் துறை தெரிவிக்கின்றது.

முச்சக்கர வண்டி தடம் புரண்டதால் விபத்து ஏற்ப்பட்டதாக காவல் துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். விபத்தில் முச்சக்கர வண்டி தடம் புரண்டதில் அதில் பயணம் செய்த 68 வயதுடைய எஸ்வாத்துவ பிரதேஷத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவிக்கின்றது.