கதறி அழுத லசித் மலிங்க : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

575

கதறி அழுத லசித் மலிங்க..

ஊறுபொக்க கின்னெலிய பகுதியில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சிறுவனே லசித் மாலிங்க. லசித் மாலிங்க எனும் சிறுவன் கல்வியிலும் விளையாட்டு துறையிலும் அதிகம் ஆர்வம் கொண்டவனாக காணப்பட்டான். பாடசாலையில் அனைத்து ஆசியரியர்களின் கவனத்தை ஈர்த்தவனே லசித் மாலிங்க.

இந்நிலையில் தாய் தந்தை இருவரும் வீட்டில் அடிக்கடி முர ண்படுவது வழக்கமாக காணப்பட்டுள்ளது. இருவருக்குமிடையில் முர ண்பாடுகள் அதிகரித்து செல்கையில தாய்க்கு பிரிதொரு நபருடன் தகாத உறவு காணப்படுகின்றமையை தந்தை உணர்ந்துக்கொண்டுள்ளார். சிறிது காலம் செல்கையில் தாய் தகாத உறவு வைத்திருந்த நபரை மறுமணம் செய்துக்கொள்வதாக தெரிவித்து விட்டு அவரோடு சென்று விட்டார்.

தாய் சென்றவுடன் தாய் அன்பிற்காக ஏங்கிக்கொண்டிருந்த லசித் மாலிங்க கல்வி மீது காணப்பட்ட அக்கறையை குறைத்துக்கொண்டுள்ளார். கல்வியில் வீழ்ச்சியை கண்டு ஆசிரியர்கள் லசித் மாலிங்கவின் தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் லசித் மாலிங்கவின் தந்தை சிறிது காலம் சென்றதும் ஏற்கனவே விவாகம் புரிந்து ஒரு பிள்ளையுடன் தனிமையில் வாழ்ந்து வந்த பெண் ஒருவரை திருமணம் செய்கின்றார். குறித்த பெண்ணின் மகனையும் அழைத்துக்கொண்டு லசித் மாலிங்கவின் தந்தையுடன் வசிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்கின்றார்.

இவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக சென்றுக்கொண்டிருந்த வேளை லசித்த மாலிங்க மீது தந்தைக்கும் அக்கறை குறைவடைந்துள்ளது. மாலிங்க பெற்றோரின் அன்பிலிருந்து புறக்கணிக்கப்பட்டான். சிறு வயது என்பதால் அடுத்த கட்டத்தை நோக்கி சிந்திப்பதற்கும் அவனால் முடியவில்லை.

காலம் கடந்தது… லசித் மாலிங்கவிற்கு 13 வயது ஆனது.. கடந்த மாதம் 9 ஆம் திகதியே எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது. லசித் மாளிங்க தாய் தந்தையரை பிரிந்து தனிமையில் உறங்கிக்கொண்டிருக்கின்றான். தந்தை அவரது அறையில் உறங்கிக்கொண்டிருந்தார் இரண்டாவது மனைவியும் அவருக்கு முதல் திருமணத்தில் பிறந்த மகனும் பிரிதொரு அறையில் உறங்கிக்கொண்டிருக்கின்றனர்.

ஆழ்ந்த நித்திரையிலிருந்த லசித் மாலிங்க தன்னை காப்பாற்றுமாறு கத றுகிறான்… திடுக்கிட்டு விழிந்தெழுந்த தந்தையும் அவரது இரண்டாவது மனைவியும் பார்க்கையில் லசித் மாலிங்க தீ யினால் எரி ந்துக்கொண்டிருந்தான். வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் பலனளிக்கவில்லை.

அன்று அதிகாலை இரண்டு மணிக்கு காவல் துறைக்கு லசித் மாலிங்கவின் தந்தை முறைப் பாடளித்துள்ளார். காவல் துறை மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து உயி ரிழந்த லசித் மாலிங்கவின் தந்தை தனது இரண்டாவது மனைவி மீதே சந்தேகம் என தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க காவல் துறையினர் இரண்டாவது மனைவியை கைது செய்துள்ளனர். தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய தந்தையும் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் லசித் மாலிங்க எதற்காக தீ க்கிரையாகி உயிரி ழந்தான், அவனை ஏன் கொ லை செய்யவேண்டும், யார் இதனை செய்திருப்பார்கள் போன்ற விடயங்களை அறிந்துக்கொள்ள காவல் துறையினர் தொடர்ந்து விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.