நள்ளிரவில் கொழும்பு களியாட்ட விடுதியில் இளம் பெண்களின் மோசமான செயற்பாடு!!

824

களியாட்ட விடுதி

கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் செயற்பட்ட விடுதியில் இளைஞர், யுவதிகள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலவத்துகொட இரவு நேர விடுதியில் சுற்றி வளைத்து பொலிஸார், அங்கு ஆபாச செயற்பாட்டில் இளைஞர் – யுவதிகளை செய்துள்ளனர்.

பேஸ்புக் ஊடாக அறிமுகமான நண்பர்கள் ஒன்றாக களியாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இதற்கு முன்னர் பல முறை களியாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை கைது செய்யும் போது அவர்களிடம் பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் 25 வயதிற்கு குறைந்தவர்கள் எனவும், நொச்சியாகம, இரத்தினபுரி மற்றும் இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.