பிரபல பெங்காலி திரைப்பட இயக்குனர் ரிதுபர்னோ கோஷ் காலமானார்

489

8-முறை இந்திய தேசிய விருது வென்ற பெங்காலி திரைப்பட இயக்குனர் ரிதுபர்னோ கோஷ் தனது 49வயதில் மாரடைப்பால் காலமானார்.

மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த ரிதுபர்னோ கோஸ் தனது பெற்ரோரின் வழியில் தானும் சினிமா துறையில் மோகம் கொண்டவர். ஆரம்ப காலங்களில் விளம்பர படங்கள்மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கி, 1994ம் ஆண்டு ஹைரர் அங்தி என்ற பெங்காலி திரைப்படம் மூலம் இயக்குனராக அவதரித்தார்.

தொடர்ந்து இவர் இயக்கிய உன்சி ஏப்ரல், தகான், உட்சாப், ரெயின்கோட், தோசர், தி லாஸ்ட் லீயர், அபோகோமென் ஆகிய திரைப்படங்கள் மாற்றுத் திரைப்பட ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றன. இதுவரை 19 திரைப்படங்களை இயக்கியுள்ள ரிதுபர்னோ அவற்றில் 8 திரைப்படங்களுக்காக தேசிய விருது வென்றிருக்கிறார்.

இவர் இயக்கிய எந்த திரைப்படமும் ஏதோ ஒரு துறையில் தேசிய விருது பெற்றுவிடும் என்பதற்காகவே இவரை தேசிய விருது இயக்குனர் என கொல்கத்தா ரசிகர்கள் அழைப்பதுண்டு.

இந்நிலையில் ரிதுபர்னோவின் திடீர் மரணம் பெங்காலி திரைத்துறையினருக்கு தாங்க முடியாத பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குழந்தைகளுக்கான சிறப்பான படங்களை இயக்கி பெரும் புகழ் அடைந்தவர் ரிதுபர்னோ. குறிப்பாக 1994ம் ஆண்டு அங்க்டி திரைப்படமும், 1995ம் ஆண்டு உனிஷே ஏப்ரல் திரைப்படமும் சர்வதேச ரீதியில் வரவேற்பை பெற்ற இவரது திரைப்படங்களாகும்.

இதில் தாயினதும், மகளனதும் உறவைச்சொல்லும் உனிஷே ஏப்ரல் திரைப்படத்திற்கு அந்த ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. அதில் நடித்த தேபாஷிரீ ரோய் அந்த ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். இவர் தற்போது திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆகவும் திகழ்கிறார்.

2003ம் ஆண்டு வெளிவந்த சோகர் பாலி திரைப்படத்தில் பாலிவூட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்திருந்ததும், 2004ம் ஆண்டு வெளிவந்த ரெயின்கோட் திரைப்படத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்ததும் ரிதுபர்னோ கோஷின் அபாரத்திறமையினால் ஈர்க்கப்பட்டதனால் ஆகும்.

அவரது தீவிர ரசிகர்களும், அவர் படித்தில் நடித்த நடிகர்களும், ‘இவ்வளவு சிறியவயதில் ரிதுபர்னோ இந்த உலகை விட்டுச் செல்வார் என ஒரு போதும் நினைக்கவில்லை’ என்கின்றனர். இவரது இறுதி திரைப்படம் சித்ராங்கதா. 2012 இல் வெளிவந்தது.

இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்த ரிதுபர்னோவின் மரணம் இந்திய திரைப்பட உலகுக்கே பெரும் இழப்பாக கருதப்படுகிறது.