கொழும்பிலிருந்து சென்ற பேருந்து ஒன்றுக்கு ஏற்பட்ட விப ரீதம் : 45 பயணிகளின் நிலை!!

1150

ஏற்பட்ட விபரீதம்

கொழும்பிலிருந்து சென்ற பேருந்து ஒன்று பாரிய விபத்துக்கு முகங்கொடுத்த நிலையில் பெருமளவு பயணிகள் தெய்வாதீனமாக உயி ர் தப்பியுள்ளனர். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று கொஸ்கொட துவமோதர பிரதேசத்தில் ரயில் வீதியை உடைத்துக்கொண்டு புகுந்தமையினால் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இவ்வாறு பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து இடம்பெற்ற போது பெலியத்த நோக்கி செல்லும் ரயில் அந்த ரயில் வீதியில் வரவிருந்தது. இந்நிலையில், பயணிகள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து ரயில் வீதியில் ஓடிச் சென்று ரயிலை நிறுத்தியுள்ளனர். எப்படியிருப்பினும் விபத்து இடம்பெற்ற தூரத்தில் இருந்து 10 மீற்றரில் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பேருந்தில் 45 பயணிகள் பயணித்துள்ளனர். அனர்த்தம் காரணமாக சிலர் மாத்திரம் சிறு காயங்களுக்கு உள்ளான போதிலும் 45 பயணிகளும் காப்பாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.