கெப் வண்டியில் மோதுண்டு குழந்தை பலி!!

222

குழந்தை ப லி

ரிதிமாலியத்த பிரதேசத்தில் கெப் வண்டியுடன் மோதி குழந்தையொன்று உயி ரிழந்துள்ளது. பெற்றோருடன் ஆறு ஒன்றில் நீராடுவதற்கு சென்றிருந்த போதே குழந்தை இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளது.

குழந்தையை நீராட்டிய பின்னர் வீதிக்கு அருகில் இருந்த மற்றைய பிள்ளையை நீராட்டுவதற்காக தாய் சென்றிருந்த வேளை குழந்தை வீதியில் பயணித்த கெப் வண்டியில் மோதுண்டுள்ளது.

இதில் படுகாயடைந்த குழந்தை பிபில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயி ரிழந்துள்ளது. விபத்து தொடர்பில் கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, ரிதிமாலியத்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.