வவுனியாவில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை யால் முஸ்லிம் வீடுகளுக்கு துஆக்கள் விநியோகம்!!

711

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வவுனியா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் வீடுகளுக்கு துன்ப துயரத்தின் போது ஓதவேண்டிய துஆக்களின் தொகுப்பை இன்று முதல் வழங்கி வருகிறது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, வவுனியா மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்றுகூடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக துன்ப துயரங்களின் போது ஓத வேண்டிய துஆக்கள் என்ற தொகுப்பு அச்சிட்டு வெளியிடப்பட்டிருக்கின்றது.

அச்சிடப்பட்ட 5000 பிரதிகளையும் மாவட்டத்திலுள்ள சகல முஸ்லிம் வீடுகளுக்கும் கொண்டு சென்று கொடுப்பதற்கான பொறுப்புக்கள் 04 பிரதேசக் கிளைகளுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. பிரதேசக் கிளைகள் அதற்கான ஒழுங்குகளைச் செய்து வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக, சாளம்பைக்குளம் பிரதேசக் கிளை தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட வீடுகளுக்கு இந்த துஆ தொகுப்பை அப்பகுதி முஸ்லிம் வீடுகளுக்கு சென்று வழங்கி வருகிறது.